Showing posts with label Tamil Kavithai. Show all posts
Showing posts with label Tamil Kavithai. Show all posts

Friday, January 2, 2009

இறுதி நாளன்று !!

நீர் குளத்தில்
கரு விழிகள்,
நடுங்கும்
கை விரல்கள்,
தளர்ச்சியுடன்
கால்கள் ,
புனகைக்க மறுக்கும்
இதழ்கள்,
மகிழ்ச்சி குடிகொண்டிருந்த
என் இடிதாங்கி
இதயமும் இடிந்தது
கல்லூரி இறுதி நாளன்று ..!!

அன்று,

மாணவன் என்ற
முத்திரை நீங்கும் நாள்,

18 ஆண்டு சுகவாசத்தை
வனவாசம் என்று
பொய் பிரச்சாரம்
செய்ய இறுதி நாள்,

" அடுத்தது என்ன ?" என்ற
கேள்வி எட்டு திசைளிருந்தும்
வரத்தொடகும் நாள்,

ஆம் இன்று
என் மாணவ பயணத்தின்
இறுதி நாள் ...

Gopi